வியாழன், 23 ஜூலை, 2020

காலனின் கனிவு - Even Death was kind lately

                              credit: third party image reference
அந்த சிறுமிக்கு அப்போது ஒரு ஏழு வயது இருக்கும்அவளது கைகளில் தனது தகப்பனார் கொடுத்திருந்த மீன் பிடிக்கும் தூண்டில் இருந்ததுசிறுமியின்  கையை தூண்டில் முள் குத்தி  கிழித்து விட கூடாது என்று  அவளது தந்தை பிரத்தியேகமாக  இரும்பை வளைத்து தூண்டில் முள் தயாரித்துக் கொடுத்து இருந்தார்கிணற்றிற்கு அருகே சென்று கிணற்றை எட்டிப் பார்த்த பொழுது, தண்ணீர் மிகவும் ஆழமான இடத்தில் இருந்ததுதூண்டிலை உள்ளே வீசி பார்த்த போது  தண்ணீரை அது தொடவில்லைமீண்டும் தூண்டிலை உள்ளே வீசிய  பொழுது கைகளில் இருந்து நழுவி தூண்டில் கிணற்றுக்குள்ளே விழுந்ததுபதறிய சிறுமி உள்ளே எட்டி எட்டிப்பார்த்தாள். சிறிது ஊன்றி முயற்சித்தால் எடுத்துவிடலாம் என அந்த சிறுமிக்கு தோன்றியதுமறுபடியும் இன்னும் அதிகமாக ஊன்றி கிணற்றை நோக்கி குனிந்தாள். அந்த நிமிடம், அந்த வினாடி அவள் தன் தவறை உணர்ந்தாள்முதலாவது  தவறு -  யாரும்  கூட இல்லாமல் கிணற்றடிக்கு வந்ததுஇரண்டாவது தவறு -  இன்னமும் நீச்சல் கற்றுக் கொள்ளாதது.

                        

                  credit: third party image reference

ஒரு நொடிப்பொழுதில் கிணற்றுக்குள் விழுந்து கூக் குரலை கேட்க யாரும் இல்லாமல் மரித்து இருக்க வேண்டியவள்,  அவள் கால்களை ஊன்றிய கல் பெயர்ந்து விழுந்ததால்கிணற்றிற்கு உள்ளே  விழ வேண்டியவள். பின்னந்தலை நிலத்தில் அடிக்க முதுகுப்புற  சிராய்ப்புகள் உடன் கிணற்றுக்கு வெளியே விழுந்தாள். இந்நாள் வரை அவள் அந்த சம்பவத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லைஇதேபோல் மற்றொரு முறை சைக்கிள் ஓட்டு வருவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது,    பயிற்சி அளித்து  கொண்டிருந்தவர் பாதியிலே சென்றுவிட, பொறுமையில்லாத அந்த சிறுமி தானாகவே சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தாள். சிறிது தூரம் சென்றபின் எதிரே லாரி ஒன்று வருவதைக் கண்டாள். வலதுபுறம் சென்று  கொண்டிருந்த சிறுமியை பார்த்த லாரி  ஓட்டுனர் அதற்கேற்றார்போல் வண்டியை நகர்த்தினார்.  திடீரென சிறுமிக்கு  அப்பா  கூறிய  சாலை விதிகள்  ஞாபகத்திற்கு வந்ததுஇடதுபுறமாக தான் செல்ல வேண்டும் என தோன்றியது. அதுவரை வலது புறம் சென்று கொண்டு இருந்த சிறுமி திடீரென இடது புறத்திற்கு செல்ல வண்டியை திருப்பினாள் அதற்குள் அந்த லாரி அருகில் வந்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் நடு ரோட்டில் வண்டியை நிறுத்தினாள். கண்ணை மூடி திறந்து பார்த்த பொழுது (அவள் கண்களைத் திறப்பாள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை ஆனாலும் அவள் கண்களை திறந்தாள்)அவள் கண்கள் திறந்து  பார்த்த பொழுது சைக்கிளின் முன் சக்கரத்திற்கு அடியிலேயே இவள் கிடந்தாள் சைக்கிளின் பின் சக்கரத்தின்மேலே லாரி நின்றது. அந்த நிலையிலும் அவள் அருகே யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவத்திலும் அந்த சிறுமியிடம், காலனும்  சிறிது கனிவுடன் நடந்துக் கொண்டான்.

                    

                credit: third party image reference

நீங்கள் கேட்கலாம் இவ்வளவும் நடக்கும் வரை அந்த சிறுமியின் வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்று. அவள் சிறுமியாக வாழ்ந்த காலத்தில் வீட்டின் பெரியவர்கள் எதற்குமே கவலைப்பட்டது கிடையாது. விடுமுறை நாட்களில் காலையில் விளையாட செல்லும் சிறுவர்கள் மாலையிலேயே   வீடு  திரும்புவார்கள். பெண் பிள்ளைகளை மாலை 5 மணிக்கு மேல் தேட ஆரம்பிப்பார்கள். ஆண்பிள்ளைகள் என்றால் இரவு 7 மணி வரை தேட மாட்டார்கள். மக்களின் மனதில் ஈரம் நிறைந்த காலம் அது . யாராவது தலைவலி என்றால் கூட, ஏதோ பெரிய நோய் வந்த மாதிரி ஒரு தெருவில் தைலம் இல்லை என்றால் அடுத்த தெருவிற்கு தன் குழந்தைகளை அனுப்பி அந்த தலைவலி வந்த ஆளுக்கு தைலம் வாங்கி கொடுப்பார்கள்மரண செய்திகள் துர் செய்திகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாதாரணமாக மரணித்தால் கூட கொடிய துயர் கொண்டனர். யாராவது அகாலமரணம் அடைந்தால் பல வருடங்கள் அவர்கள்  மரணம் பேசப்பட்டதுஇன்னமும் அவளது கிராமத்தில் முப்பது வருடத்திற்கு முன் நடந்த அகால மரணங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. மக்களின் மனது மென்மையாக இருந்ததனால்தான் என்னமோ காலனும் சிறிது கனிவுடன் நடந்து கொண்டான்.  அவனுக்கு தானே நடந்தது, எனக்கு என்ன வந்தது” என்ற சிந்தனைகள், சிறிது காலத்திற்கு முன் நம்மிடையே இல்லை. ஆதலால் தான் மனிதர்கள் சாதாரணமாக மரணித்தார்கள். குழந்தைகள் இடையேயான மரணங்கள் நிறைய இல்லை.

ஒரு நோய் சாதாரண காய்ச்சல் மாத்திரையில் குணமாகும் பொழுதுஅதற்கென விசேஷித்த சிகிச்சைகள் தேவையில்லை. அது போலத்தான் மரணமும் சாதாரண மரணங்களை நாம் மதிக்கும் பொழுது அசாதாரண நிகழ்வுகளுக்கு அவசியமில்லை. நமது மனம் மரத்துப் போகும் பொழுது! மரத்துப்போன மனங்களுக்கும் மரணம் வலிக்க வேண்டும் அல்லவா அதனால்தான் என்னவோ இன்றைய காலத்தில் மரணங்களும் மிக கொடூரமாக இருக்கின்றன.


credit: third party image reference


இன்றைக்கு எத்தனை பேர் துக்க வீடுகளுக்கு செல்கிறோம். எத்தனை பேர் குழந்தைகளை துக்க வீடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம். குடும்பத்தில் நிகழும் சாதாரண மரணங்கள், நமது குழந்தைகளின் மனதை பாதிக்கும் என கருதி அவர்களை வீட்டிலேயே விட்டுச் செல்கிறோம். ஆனால் வீட்டிற்குள் தொலைக்காட்சி மூலமாக அல்லது அலைபேசி மூலமாக எந்த மாதிரியான மரணங்களை அவர்கள் பார்க்கிறார்கள். மரணம் என்றால் என்ன என்பதை குழந்தைகள் இன்றைக்கு எப்படி தெரிந்து கொள்கிறார்கள். சிறுவன் சுஜித் மரணம்,  நிர்பயா மரணம், ஆசிபா மரணம் என சிறுவர்கள் அன்றாட வாழ்வில் மிகக் கொடுமையான மரணங்களை மிக சாதாரண நிகழ்வுகளாக பார்க்கின்றனர். மிகக் கொடுமையான விஷயங்கள் சாதாரண நிகழ்வுகள் ஆகும் பொழுது அவர்கள் வாழ்வில் கொடுமையான நிகழ்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கும். நம்மால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? ஆனால் அதுதான் இப்பொழுது நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது.

எங்கள் ஊரில் வெகு நாட்களுக்கு முன் ஒரு ரைஸ்மில் இருந்துள்ளது கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது 5 ஊர்க்காரர்களும் அந்த ரைஸ் மில்லுக்கு வந்து அரிசி வாங்கி சென்றுள்ளனர். இன்றளவும் ஒரு வாத்தியார் இந்த நிகழ்வை மாணவர்களுக்கு பகிர்ந்து வருகிறார். ஆனால் இன்று நாம் என்ன செய்கிறோம் “லாக் டவுன்” என்று அறிவித்தவுடன் 5 கிலோ அரிசி வாங்கிய நாம் ஓடி சென்று 25 கிலோ மூட்டை இரண்டை பதுக்கி வைக்கிறோம். எங்கே போனது நம் மாண்பு? மனிதர்களாகிய நாம் இவ்வளவு கொடூரர்களாய் மாறிப் போன பின்பு கொடூரனாகிய காலன் எவ்வளவு கொடூரனாய் மாறுவான். ஏன் இப்படி நடக்கிறது? இதுவரை இப்படி நடந்தது இல்லையே? என புலம்பும் நமக்கு "இப்படியெல்லாம் நடக்க காரணமே நாம் தான்" என்பது ஏனோ புரிவதில்லை.


                                

                     credit: third party image reference

மனிதன் மனிதனாக வாழும் பொழுது, அவனது மரணமும் மனிதனுக்கு ஏற்படும் மென்மையான, மற்றும் மனிதத் தன்மையாக இருக்கும். மனிதன் மிருகமாக மாறி வாழும் போது அவனுக்கு ஏற்படும் மரணமும் ஒரு விலங்கு மற்றொரு விலங்கை எப்படி கீறி, பீரி கொடுமையான மரணத்தை ஏற்படுத்தி சாப்பிடுமோ அப்படியே மனிதனின் மரணமும் கொடுமையாக இருக்கும். “ஏன் இவ்வளவு கொடூரமான மரணங்கள்?” என காலனை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு “ஏன் இவ்வளவு கொடூரமாக நாம் வாழ்கிறோம்?” என நம்மை நாமே கேள்வி கேட்டால்? ஒருவேளை இனி வரும் தலைமுறையாவது மனிதனாய் வாழும். மீண்டும் ஒரு முறை காலனும் கனிவுடன் நடந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. மனிதம் வளர்ப்போம் வாருங்களேன்!